search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் திருட்டு"

    • தொழிலாளர்கள் 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஊர் ஊராக வாகனங்களில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் அதே தெருவை சேர்ந்த அஸ்வின் (36), பாபு (41) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று இருந்தார்.

    நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் ஒரு யு.பி.எஸ் பேட்டரி திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து சத்தியமூர்த்தி பாகாயம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அஸ்வின், பிரபு ஆகியோர் பூட்டி இருந்த வீட்டை திறந்து கியாஸ் சிலிண்டர், பேட்டரி திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேருக்கு அடி- உதை
    • போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ மனோஜ் (வயது 21).இவரது வீட்டில் உள்ள போர்டிகோவில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணிக்கு 2 பேர் பைக்கில் அவருடைய வீட்டின் அருகே வந்தனர். போர்டிகோவில் சிலிண்டர் இருந்ததை பார்த்த அவர்கள் அதனை திருட முடிவு செய்தனர்.

    ஒருவர் சென்று போர்டிகோவில் இருந்த சிலிண்டரை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.அதனை பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த ஸ்ரீமனோஜ் குடும்பத்தினர் சிலிண்டர் திருடி செல்வதை கண்டு கூச்சலிட்டனர். அந்த தெருவில் இருந்த பொதுமக்கள் சிலிண்டர் திருடியவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலிண்டர் திருடிய இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 46) கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்துவாச்சாரியில் நேற்று கெங்கையம்மன் கோவிலில் அம்மன் நகைகள் கொள்ளை போனது. பட்டப்பகலில் வீடுபகுந்து கியாஸ் சிலிண்டர் திருடியுள்ளனர். இதனால் பொது மக்களிடையே திருட்டு பயம் ஏற்பட்டுள்ளது.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×